Skip to main content

"ஒரு தொடர் கனவு நிறைவேறியது" - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி  

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

mari selvaraj tweet about vadivelu

 

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படத்தை இயக்குவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மாரி  செல்வராஜ் இயக்க இயக்கவுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 

 

இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது. மாமன்னனில் வைகைபுயல்" எனக் குறிப்பிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்