Skip to main content

''என் அடுத்த படமும் பா.ரஞ்சித்துக்கு தான்...ஏன் தெரியுமா..?'' - மாரி செல்வராஜ் 

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான “இரண்டாம் உலகப்போரின் குண்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் குறித்து பேசியபோது....  

 

maari selvaraj

 

 

"நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ, அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் பேசி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும். ஏனென்றால் இது மக்களை நம்பி எடுக்கப்பட்ட படம். அவர்கள் இப்படத்தை கைவிடமாட்டார்கள். இந்நிறுவனத்தின் மூன்றாவது படத்தை நான்தான் இயக்குவேன். நான் இதை கர்வத்தோடு சொல்வேன். ஏனென்றால் நான் நம்பும் அரசியல், மற்றும் கலையின் வழி எந்த சமரசமும் இன்றி படம் இயக்க இந்நிறுவனம் என்னை அனுமதிக்கிறது. இதுபோல் படம் செய்ய வேறெந்த நிறுவனம் அனுமதிக்காது." என்றார்

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பா.இரஞ்சித், துருவ் விக்ரம், மாரி செல்வராஜ்" - கூட்டணி உறுதியானது!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

vvxx

 

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

 

இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தது. இதில், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ’ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிக்க, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

 

 

Next Story

புத்தகத் திருவிழா திரைப்பட விருதுக்கு ‘பரியேறும்பெருமாள்’ தேர்வு

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

tn


புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2018-ல் வெளிவந்த சிறந்த திரைப்படத்திற்கான விருது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வரவேற்புக்குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி, செயலாளர் அ.மணவாளன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 3-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற பிப்.15 முதல் 24-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா குறித்த தகவல்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் வகையில் வரவேற்புக்குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் விரிவான விளம்பரம், அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் விழிப்புணர்வுப் பேரணி, பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துவருதற்கான வாகனவசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

  வழக்கம் போல இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவில் சிறந்த கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்களுக்கான விருதும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் கூடுதலாக 2018-ல் வெளியான சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த குறும்படத்துக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த வகையில் 2018-ல் வெளியான சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 


புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 24 அன்று விழா மேடையில் இயக்குனரை அழைத்து விருது வழங்கி கவுரவிக்கப்படும். இதர விருதுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து, திரைப்பட விருதுக்கான தேர்வுக்குழுத் தலைவர் எஸ்.இளங்கோ.. 
சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த தமிழ் இலக்கியப் பதிவுகள் ஏராளமாக வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், மக்கள் கலையான தமிழ் சினிமாவில் சாதிய ஒடுக்குமுறை குறித்த பதிவு இல்லையென்றே சொல்ல வேண்டும். இத்தகைய சூழலில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள படம் பரியேறும் பெருமாள். நம் அன்றாம் சந்தித்துவரும் சாதிய சமூகத்தை அப்படியே நகலெடுத்து வைத்திருக்கிறது படத்தின் திரைக்கதை. ஒரு துளியளவு கூட குறைவுமில்லை; மிகையுமில்லை. உலக சினிமாக்களில் நாம் காணும் நேர்த்தியான திரைக் கதை அமைப்பு பரியேறும் பெருமாளில் உள்ளது. கதை வசனம் எழுதி இயக்கியும் இருக்கிற மாரி செல்வராஜ் தனது மற்றும் தன்னைச் சுற்றியுள்ள தனக்கு நெருக்கமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கதையைப் படைத்துள்ளார். அச்சு அசலாக சாதிய அவலத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து, சாதிய மனோபாவத்துடன் இருப்பவர்களை குற்ற உணர்வுக்குத் தள்ளும் வகையில் நேர்த்தியான வகையில் படமாக்கியுள்ளதற்காக இந்தப்படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்றார்.