Skip to main content

"நான் நினைச்சது நடந்திருக்கு" - மாரி செல்வராஜ்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

mari selvaraj about maamannan response

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ளதாலும் மாரி செல்வராஜ் படம் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. 

 

மேலும் உதயநிதியின் ரசிகர்கள் திரையரங்கில் ஸ்வீட் கொடுத்தும் வெடி வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தியிருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்தியிருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் மாரி செல்வராஜ் சென்று பார்த்து வருகிறார். அப்போது ஒரு திரையரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மக்கள் நல்ல ஆதரவு தந்துள்ளார்கள். இருப்பினும் முழுமையான மக்கள் ஆதரவுக்காக காத்திருக்கிறேன். நிச்சயமா நல்ல விஷயங்களை, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மக்கள் ஏத்துக்குவாங்க என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம் தான் மாமன்னன். எல்லா மக்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னுடைய எமோஷன் மக்களிடத்தில் கனெக்ட் ஆகியிருக்கு. நான் என்ன நெனச்சு இந்த படம் எடுத்தனோ அது மக்களுக்கு போய் சேர்ந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்களுக்கு நன்றி" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்