Skip to main content

நடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...?

Published on 23/05/2019 | Edited on 23/05/2019
m

 

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க  இதுவரை 343 இடங்களும், காங்கிரஸ் 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இதுவரை 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொடுத்தால் இரட்டை இலை; இல்லையென்றால் வாழை இலை” - நடிகர் மன்சூர் அலிகான்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Actor Mansoor Ali Khan has spoken about AIADMK in parliamentary elections

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார் இதற்கு முன்பு ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறினார். தற்பொழுது வேலூர் தொகுதி என்கிறார். இதற்காக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தினார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வ உ சி நகரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்கு கடைகளில் சென்று அமர்ந்து குழந்தைகளை கொஞ்சியும் மக்களிடையே தமக்கு ஆதரவு திரட்டினார்

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் உங்களை நீக்கியதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “பாலமுருகன் என்பவர் தான் பொதுச்செயலாளர் என்னை நீக்கியவர் கிடையாது. காசு வாங்கிக்கொண்டு ஏதோ பண்ணி என்னை நீக்கியுள்ளார். இது நான் ஆரம்பித்த கட்சி இது இந்தியா முழுக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எலெக்சன் கமிஷன் அப்ரூவலில் பாலமுருகன் என போட்டு உள்ளது” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு, “அவர்களிடம் போய் பேசி விட்டு வந்தேன். அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான்  இங்கே வேலூரில் நிற்கிறேன். கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது; ஆனால் கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது. அவர்களை குறை சொல்லக்கூடாது அது அம்மாவோட கட்சி; தாய் கழகம். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பு மனு ஏற்றுக் கொண்ட பின்பு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். இப்பவே வாளை சுழற்ற வைக்காதீர்கள் இது திப்புவின் வாள்” என்றார்.

ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவேன் என கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, “அது இப்போது இயலாது பொருளாதார வசதி இல்லை. கூட்டணி தருவார்கள் என்று பார்த்தேன் தரவில்லை. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏதும் பேசவில்லை அவர் இறந்த பிறகு அதோடு சென்றுவிட்டது. பிரதமர் மோடி, ஜெயலலிதா அம்மாவை பாராட்டினார். அவரே தான் போட்டுத் தள்ளினார். அவரே தான் தீர்த்துக் கட்டினார் அந்த சரித்திரம் மக்களுக்கு தெரியும்.

இந்த தேர்தலை பாரதப் பிரதமர் திருவிழா என்று கூறியுள்ளார். அவர் ஏற்கனவே முடித்து விட்டார். தேர்தல் திருவிழாவில் நான் பபூன் அல்ல, அவரே பபூன் ஆக நடிக்கிறார். எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால் ஈடி வந்துவிடும்; அந்த பயம் நமக்கு  இல்லை. ஒரே மக்கள் ஒரே நாடாக இந்தியா உள்ளதா ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம்” என்றார்.

மேலும், டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாட்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா. வென்றால் வேலூர் கோட்டை, இல்லை என்றால் டெல்லி செங்கோட்டை ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாக இருப்பேன், ஒற்றை ஆளாக இருந்தாலும் ஒரப்பாக(காரம்) இருப்பேன். தத்திகள் மாறி நான் இருக்க மாட்டேன்” என்று  மன்சூர் அலிகான் கூறினார்.

Next Story

ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் திருட்டு - மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
mansoor ali khan statement regards his party issue

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் மன்சூர் அலிகான் அ.தி.மு.க.வுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தனது கட்சியான இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து கடந்த 13ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (15.03.2024) சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கா.கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கண்ணதாசன் பொதுச்செயலாளர் இல்லை எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலி கான்.  அந்த அறிக்கையில், “இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் ஆக குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்லபாண்டியனால் ஆபிஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம்பிடித்து கட்சியில் சேர்ந்ததாக காட்டியும், அவ்வப்போது உடன் வருகிறேன், அண்ணா என்று வந்தும் பயன் பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என்று சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்.

சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார். அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மீள் மனு செய்து தேர்தல் ஆணயத்திடம் ஒப்புதல் வாங்கி, விட்டோம். அவர் குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழனை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை. நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில், ஆதரவு திரட்டி வருவதால்... மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும். அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.