Advertisment

'மங்காத்தா' 10ஆம் ஆண்டு கொண்டாட்டம்... தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

ajith

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் 'மங்காத்தா'. கிளவுட் நைன் புரொடக்சன்ஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்த இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. நடிகர் அஜித், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என மூவர் கேரியரிலுமே முக்கிய படமாகவும் மங்காத்தா அமைந்தது.

இந்த நிலையில், மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘மங்காத்தா' வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போதுவரை தல அஜித்திற்கு இப்படம் ஒரு சிறந்த ப்ளாக் பஸ்டராக இருந்துவருகிறது. தீவிர அஜித் ரசிகன் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் மங்காத்தாவில் இருந்தன. ஸ்டைலிஷ் மேக்கிங், யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலம், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல், குறிப்பாக அஜித்தின் கிளாஸ் மற்றும் மாஸ். நூற்றில் ஒரு படம்தான் நடிகர்கள், படக்குழுவினர், ரசிகர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க அதிபர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்தும். ‘மங்காத்தா’ அப்படியான அரிய ரத்தினங்களில் ஒன்று.

'மங்காத்தா' ஒரு உண்மையான ப்ளாக்பஸ்டர் என்று சொல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதுமுதல் ரிலீஸ் ஆனதுவரை, ஏன் தற்போதுகூட இந்தப் பயணம் குறித்து நான் நினைத்துப் பார்க்கும்போது 'மங்காத்தா' அற்புதமான அனுபவமாக உள்ளது. அனைவருக்கும் பிடித்தமான படங்களின் பட்டியலில் நிச்சயமாக 'மங்காத்தா' இடம்பெற்றிருக்கும். இந்த மைல்கல்லில் நானும் ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை தயாரிப்பாளராக அல்லாமல் ஒரு ரசிகனாக உணரவைக்கும் படம் 'மங்காத்தா'" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

venkat prabhu ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe