கமலுக்கு பதில் சிரஞ்சீவி; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணிரத்னம்

maniratnam thanks chiranjeevi

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நேற்று( 19.8.2022) ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மணிரத்னம், "பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியதற்கு ராஜமௌலி சார் பாகுபலி மாதிரி படத்தை எடுத்ததனால்தான் என்னால் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடிந்தது. சிரஞ்சீவி சாருக்கு நன்றி, ஆனால் அதற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது" எனக் கூறியிருந்தார்.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் தொடக்க காட்சியில் கதை சுருக்கம் ஒன்று இருப்பதாகவும், அந்த கதைக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி குரல் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில் மணிரத்னம் பட விழாவில் சிரஞ்சீவி நன்றி சொல்லியுள்ளது மேற்கண்ட தகவலை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

ACTOR KAMAL HASSHAN chiranjeevi maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe