maniratnam about sivakarthikeyan in amaran audio launch

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மணிரத்னம், தயாரிப்பாளர் தாணு, லோகேஷ் கனகராஜ், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மணிரத்னம் பேசுகையில், “கற்பனை கதைகளை இயக்குவதை விட நிஜ கதைகளை இயக்குவது மிகவும் கடினம். சில பேர் வந்ததும் மிகப் பெரிய ஹீரோவா மாறிடுவாங்க. சில பேர் தான் படி படியா வளருவாங்க. சிவகார்த்திகேயன் அப்படித்தான் வளர்ந்திருக்கீங்க. நீங்க என்னைமாதிரி சிவா. நிறைய பேருக்கு நீங்க இன்ஸ்பிரேஷ்னா இருக்கீங்க. சாய் பல்லவியின் ரசிகன் நான். அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.