Skip to main content

ஓடிடி-யில் வெளியாகும் மணிரத்னத்தின் 26 படங்கள்!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

Mani Ratnam

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்படும் இப்படமானது, இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமாகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் நட்சத்திரப்பட்டாளங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தை கரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மணிரத்னம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கிவருகிறார்.

 

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கிய பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகள் தற்போது சென்னையிலுள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான 26 திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருவதாகவும் அப்பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு படமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”அவர் ரோடு போட்டுக்கொடுத்தால் நான் நல்லபடியாக வந்துவிடுவேன்” - மணிரத்னம் கலகல பேச்சு

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Mani Ratnam

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், “நான் பேச நினைத்ததையெல்லாம் பாலாஜி சக்திவேல் பேசிவிட்டார். இந்த விழாவிற்கு இவ்வளவு வாரியர்ஸை லிங்குசாமி அழைத்து வருவார் என்று எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்திற்கான வார் சீன்ஸை இங்கு வைத்தே எடுத்திருப்பேன். ஹைதராபாத்வரை சென்று கஷ்டப்பட்டுவிட்டேன். லிங்குசாமி ரொம்பவும் பாசிட்டிவான மனிதர். அவர் மூலமாகத்தான் எனக்கு எல்லா இயக்குநர்களுடனும் தனிப்பட்ட அறிமுகம் கிடைத்தது. பொன்னியின் செல்வனை ஹைதராபாத்தில் ஷூட் பண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் இந்தப் படத்தை லிங்குசாமியும் அங்கு ஷூட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டார். நாங்கள் மெதுவாக வந்துகொண்டு இருக்கிறோம். நீங்கள் ரோடு போட்டுக்கொடுத்தீர்கள் என்றால் நான் பின்னாடியே நல்லபடியாக வந்துவிடுவேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

ஓடிடியில் வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' ? விளக்கமளித்த படக்குழு

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

Ponniyin Selvan film to release theatres

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவ ஆனந்த் பிரமாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி முதலில் திரையரங்குகளில் வெளியாகும், அதன்பிறகு தான் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.