Skip to main content

”அவர் ரோடு போட்டுக்கொடுத்தால் நான் நல்லபடியாக வந்துவிடுவேன்” - மணிரத்னம் கலகல பேச்சு

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Mani Ratnam

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், “நான் பேச நினைத்ததையெல்லாம் பாலாஜி சக்திவேல் பேசிவிட்டார். இந்த விழாவிற்கு இவ்வளவு வாரியர்ஸை லிங்குசாமி அழைத்து வருவார் என்று எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்திற்கான வார் சீன்ஸை இங்கு வைத்தே எடுத்திருப்பேன். ஹைதராபாத்வரை சென்று கஷ்டப்பட்டுவிட்டேன். லிங்குசாமி ரொம்பவும் பாசிட்டிவான மனிதர். அவர் மூலமாகத்தான் எனக்கு எல்லா இயக்குநர்களுடனும் தனிப்பட்ட அறிமுகம் கிடைத்தது. பொன்னியின் செல்வனை ஹைதராபாத்தில் ஷூட் பண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் இந்தப் படத்தை லிங்குசாமியும் அங்கு ஷூட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டார். நாங்கள் மெதுவாக வந்துகொண்டு இருக்கிறோம். நீங்கள் ரோடு போட்டுக்கொடுத்தீர்கள் என்றால் நான் பின்னாடியே நல்லபடியாக வந்துவிடுவேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்