“உங்களைப் போன்று யாரும் இல்லை" - நடிகர் மம்மூட்டி உருக்கம்!

vgdbdbvd

'தேவதாஸ்', 'கங்கா யமுனா', 'ஆன், தஸ்தான்', 'மொகல்-இ-அஸாம்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.

இவரதுமறைவுக்குத்திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "புகழ்பெற்ற நாடக கலைஞனுக்குப் பிரியாவிடையளிக்கிறேன். நான் உங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் அன்பு மற்றும் பாசத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். உங்கள் தயவும் சொற்களும் என்னைப் போன்றவர்களை உங்கள் சொந்தமாக உணரவைத்தன. எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்த ஒரு நடிகருக்குப் பிரியாவிடையளிக்கிறேன். உங்களைப் போன்று யாரும் இல்லை. அது உங்களுக்கு முன்னும் அல்லது உங்களுக்குப் பிறகும்" என பதிவிட்டுள்ளார்.

dilip kumar Mammootty
இதையும் படியுங்கள்
Subscribe