Skip to main content

"பட்டியலில் மலையாள சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது" - மம்மூட்டி பெருமிதம்

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

"Malayalam cinema stands tall in the list of winners" - Mammootty

 

கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (22/07/2022) டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் மலையாள படமான அய்யப்பனும் கோஷியும் படம் சிறந்த இயக்குநர் - சச்சிதானந்தன், சிறந்த துணை நடிகர் - பிஜு மேனன், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. மேலும் சிறந்த ஒலிப்பதிவு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர் (மாலிக்) படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமா நான்கு தேசிய விருதுகளை வென்று மலையாள திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "68வது தேசிய திரைப்பட விருதுகள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றியாளர்கள் பட்டியலில் மலையாள சினிமா தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு பெருமை அடைகிறேன். அபர்ணா பாலமுரளி, பிஜு மேனன், சென்னா ஹெக்டே, நாஞ்சியம்மா மற்றும் அனைத்து தகுதியான வெற்றியாளர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த சிறப்பு தருணத்தில் சச்சியை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றுமொரு பதிவில் "தேசிய விருது. அழகான பிறந்தநாள் பரிசு..பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா" என இன்று பிறந்தநாள் காணும் சூர்யாவிற்கு வாழ்த்தும், தேசிய விருது பெற்றதற்காக பாராட்டும் தெரிவித்துள்ளார். சூர்யா மம்மூட்டி பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்நது நன்றி தெரிவித்துள்ளார்.  

 

இதனிடையே நடிகர் மோகன்லால், "தேசிய திரைப்பட விருது பெற்ற அனைவருக்கும், குறிப்பாக சிறந்த நடிகர்களான சூர்யா, அஜய் தேவ்கன் மற்றும் அபர்ணா பாலமுரளி, பிஜு மேனன் மற்றும் நஞ்சியம்மா ஆகியோருக்கு இந்த தகுதியான அங்கீகாரத்திற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற அன்புள்ள சச்சியை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றுமொரு ட்விட்டர் பதிவில், "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்ற தற்செயல் நிகழ்வுகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள், அன்புள்ள சூர்யா" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா மோகன்லாலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.