‘மக்கள் தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக விண்ஸ்டார் விஜய் மற்றும் மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்க ளூருரை சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் உள்ள இளைஞன் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, மேடையில் நடிப்பது என்று இருக்கிறான். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவது, தாயம் விளையாடுவது, அத்தை பெண்களுடன் சுற்றுவது என்று பொழுதை கழிக்கிறான். அவன் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சி என்ன? அதில் வெற்றி பெற்றானா? என்பது இப்படத்தின் கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை எச்.முரு கன் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது. படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எச். முருகன் டைரக்டு செய்கிறார். சந்தோஷ் ராம் இசையமைக்கிறார். மும்பை, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஏற்காடு, கரூர், சென்னையில் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். படத்தின் டீசர் வெளியீடு விழா மூலம் வெளியிடப்பட்டுள்ளது.