Skip to main content

“சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன்” - மகேந்திரன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
mahendran movie press meet

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. இதில் சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் மகேந்திரன் பேசியதாவது, “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கணும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது, “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். ஜி.எம். சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்றுத்திறனாளி ரசிகரின் ஆசை; விஜய்யிடம் ரெகமெண்ட் செய்த மகேந்திரன்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

mahendran shared a vijay fan video

 

நடிகர் விஜய், தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

கடந்த மாதம் விஜய்யை பார்க்க வேண்டும் என ஒரு குழந்தை கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, அந்தக் குழந்தையின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றினார் விஜய். பின்பு கடந்த 17 ஆம் தேதி விஜய்யின் வீட்டின் முன், அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகை ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இந்த வீடியோவும் வைரலாக விஜய் அவரை சந்தித்தது போல் எந்த தகவலும் வெளியாகவில்லை. 

 

இந்த நிலையில் விஜய்யை பார்க்க வேண்டும் என ஒரு மாற்றுத்திறனாளி பெட்ரோல் பங்க் ஊழியர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விஜய்யுடன் 'மாஸ்டர்', படத்தில் நடித்த மகேந்திரன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘தான் ஒரு தீவிர விஜய் ரசிகர். அதற்கு அளவே இல்லை. ஆனால் ஒரு முறை கூட அவரை நேரில் பார்த்ததில்லை. எப்படியாச்சும் பார்த்து விட வேண்டும்’ என்கிறார். 

 

பின்பு மகேந்திரன், "அண்ணே... உங்க தீவிரமான ரசிகர். உங்களை பார்த்தே ஆக வேண்டும் என சொல்கிறார்" எனச் சொல்கிறார். மேலும் அந்த ரசிகரின் ஃபோனின் பின்புறம் 'அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதோடு அந்த வீடியோவில் விஜய்யின் ரஞ்சிதமே பாடலின் ஸ்டைலில் முத்தம் கொடுக்கிறார். 

 

 


 

Next Story

திமுகவில் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

New responsibility for Mahendran in DMK!

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (07/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் சட்டத் திட்ட விதி: 31- பிரிவு: 19- ன் படி திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.