Skip to main content

ஓடிடி ரிலீஸை உறுதி செய்த 'மகான்' படக்குழு 

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

mahaan movie release on amazon prime feb10

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

 

'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் படக்குழு தற்போது அதை உறுதி செய்துள்ளது. அதன்படி, 'மகான்' நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்குவா டூ கேம் சேஞ்சர் - பட்டியலை வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
kanguva to game changer amazon prime ott announced his list

திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதே போல் வெப் சீரிஸ்களுக்கும் படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் 2024ல் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கங்குவா - சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூட்யூபில் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. 

கேம் சேஞ்சர் - ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரிலீஸ் அப்டேட் நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

சிட்டாடெல் - வெப் சீரிஸான இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் மற்றும் டீகே இயக்கி வரும் இத்தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பாகும். இந்தியாவில் சிட்டாடல் ஹனி பனி என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 'கேங்க்ஸ்' - சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றும் இந்த சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். 

சுழல் சீசன் 2 - ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத் தவிர்த்து ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி', அனுஷ்கா ஷெட்டியின் ‘காதி’, விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார், எனப் பல படங்களின் திரையரங்கிற்கு பின் வெளியாகும் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Next Story

“மைல் கல் என்பதில் சந்தேகமே இல்லை” - அடுத்த பட அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
mari selvaraj next movie update

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் அனுபமா பரமேஷ்வரன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியதாகவும் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள், பா. ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும். திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.