நிலமோசடி தொடர்பாக, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி. ஆகியரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார். அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சி.பி.சி.ஐ.டிவிசாரணைக்கு மாற்றக்கோரி, நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (4.2.2022) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்வதோடு, வழக்கு விசாரணையை6 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.