Advertisment

'மாவீரன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? இயக்குநர் மடோன் அஷ்வின் பதில்

madine ashwin explained maaveeran movie rumor

மண்டேலா படத்திற்குப் பிறகு இயக்குநர்மடோன்அஷ்வின் சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இயக்குநர்மடோன் அஷ்வினுக்கும்சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

Advertisment

இந்நிலையில் இயக்குநர்மடோன் அஷ்வினை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தோம். அதற்கு இயக்குநர் மடோன் அஸ்வின், "என்னது படப்பிடிப்பு நிறுத்தமா? யாருங்க இந்தப் புரளிய கிளப்புனது? அவுட்-டோர்ஷுட்டிங் ஆரம்பிக்கற டைம்ல செம மழை வந்துருச்சு. இப்ப மழை நின்னதும் ஷுட்டுக்கு வந்துட்டோம். இப்ப கூட ஷுட்டிங் ஸ்பாட்ல இருந்துதான் பேசிட்டு இருக்கேன். ஆனா ஊனான்னா எதுவும் விசாரிக்காம இஷ்டத்துக்கு இப்படி புரளிய கிளப்பி விட்டுட்றாங்க. நம்பிக்கையா, வேகமா வேலை செஞ்சுட்டு இருக்குறப்ப இதெல்லாம் பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஷுட்டிங் சூப்பரா போய்ட்டு இருக்கு. படம் நல்லா வந்துட்டு இருக்கு. சீக்கிரம் தியேட்டருக்கு வரும்" என நம்பிக்கையாகத்தெரிவித்தார்.

Advertisment

actor sivakarthikeyan director Madonne Ashwin Maaveeran movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe