madhavan said panjangam helped isro

தமிழ் மற்றும் இந்திசினிமாவில்கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு'. இந்த படம்இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம்வெளியீட்டுக்குசில நாட்களே உள்ள நிலையில்ப்ரோமோஷன்பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதில் கலந்து கொண்ட மாதவன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப்பதிலளித்தார். அப்போது நிருபர்ஒருவர், " உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும்,நம்நாட்டில் மட்டும்விஞ்ஞான சாஸ்திரம், வானியல்,ஆரியப்பட்டா, நட்சத்திரம், கோள்கள்உள்ளிட்டவைகள்எல்லாம் அந்த காலத்திலேகணித்திருந்தார்கள். அப்படி இருக்கையில்அதுக்கும்இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்புஇருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார்.இதற்குபதிலளித்த மாதவன், "கண்டிப்பாகத்தொடர்புஇருக்கு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33வது முறைதான்செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீனஇன்ஜின்தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்தவெற்றியைப்பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும்இன்ஜின்மிகவும் சிறியது, அவர்களதுராக்கெட்செல்லும் தூரத்தைவிடகுறைவாகத்தான் செல்லும். இருந்தாலும் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டுசெவ்வாய்க்குசெயற்கைக்கோளைஅனுப்பியது.இதற்காகபஞ்சாங்கம் வானியல் வழிமுறைவரைபடத்தைப்பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி செவ்வாய்க்குஇஸ்ரோசெயற்கைக்கோளைஅனுப்பியுள்ளது.அதுவெற்றிகரமாகத்தனது வேலையைச்செய்தது" என்றார்.