தமிழ் மற்றும் இந்திசினிமாவில்கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு'. இந்த படம்இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படத்தின்ட்ரைலர்கடந்த ஆண்டு வெளியாகி பலரின்கவனத்தைப்பெற்றது.
இந்நிலையில் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' படக்குழு தற்போது புதியபோஸ்டர்ஒன்றை வெளியிட்டுள்ளது.ரிலீசிற்குசில நாட்களே உள்ள நிலையில்ரசிகர்களைக்கவரும் வகையில்இப்போஸ்டர்வெளிவந்துள்ளது. இதனை மாதவன் தனதுட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு "ஒரு சிறந்த விஞ்ஞானி, உண்மையான தேசபக்தர், கண் இமைக்கும் நேரத்தில் வில்லனாக மாறிய கதை"எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 'துபாய்எக்ஸோ2022'-ல் இப்படத்தின்ட்ரைலர்ஒளிபரப்பு செய்யப்பட்ட போது பார்வையாளர்கள் எழுந்து நின்றுகைதட்டிப்பாராட்டு தெரிவித்தனர். அதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற 'கேன்ஸ்திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது,படத்தைப்பார்த்த ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்அனுராக்தாகூர் உள்ளிட்ட பலரும் தங்களதுவாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.சர்வேதேசநாட்டுதிரைப்படவிழாவில் பலரதுபாராட்டுகளைக்குவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
NEW POSTER “A LOT OF IMPERFECT PEOPLE TRYING TO MAKE A PERFECT WORLD” . #Rocketrythefilm ?? The story of a great scientist, a true patriot, who was turned into a villain in the blink of an eye.
RELEASING JULY 1st. pic.twitter.com/8SRvRO5oZH
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 20, 2022