Skip to main content

பிரபல விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Madhavan to act in GD Naidu's biopic

 

தமிழ் மற்றும் இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் மாதவன்,  'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை தொடர்ந்து இந்தியில் 'தோகா' படத்தில் நடித்திருந்தார். தமிழில் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இந்த நிலையில், மாதவன் அடுத்ததாக தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.‌ இப்படத்தில் ஜி.டி.நாயுடு படைத்த சாதனைகளை பற்றி பேசவுள்ள இப்படத்திற்காக ஜி.டி.நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த புதிய பதவி

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

madhavan appointed as FTII head

 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் எனப் பல்வேறு மொழிகளில் பயணித்துள்ளார் நடிகர் மாதவன். கடந்த ஆண்டு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற தலைப்பில் இயக்கியதோடு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். 

 

இப்படம் கடந்த வருடம் பிரான்சில் நடந்த உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர்.  

 

இதையடுத்து சமீபத்தில் 69வது தேசியத் திரைப்பட விருது அறிவிப்பில் சிறந்த படம் என்ற பிரிவில் 'ராக்கெட்ரி' படத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.