அமரர் கல்கியின் எழுத்தில் உருவான நாவல் பொன்னியின் செல்வன். இந்த கதையை தற்போது மணிரத்னம் படமாக எடுத்து வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளனர்.

Advertisment

madhan karky

இந்த கதையை முதன்முதலில் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தவர் எம்.ஜி.ஆர் அந்த படத்தின் போஸ்டர் கூட அச்சமயத்தில் வெளியானது. ஆனால், தயாரிப்பு செலவு காரணங்களால் அது அப்படியே கைவிடப்பட்டது.

Advertisment

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கும் வகையில் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அனிமேஷனில் பொன்னியின் செல்வனை படமாக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘ரமேஷ் தமிழ்மணி இப்படத்திற்கு இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வந்தியதேவனின் அறிமுக பாடல் இது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment