vsgfagasv

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதை மலையாளி அல்லாத கவிஞர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை. விருதுபெறும் வைரமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், மலையாளம் சினிமா உலகில் இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துவந்தன. இதற்கிடையே கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்துவரும் பாடகி சின்மயியும் ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கவிஞர் வைரமுத்துவை தன் திருமணத்திற்கு அழைக்கச் சொல்லி டார்ச்சர் செய்ததே அவர் மகன்தான் என சின்மயி கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இதற்கு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...“இது அவர் சொல்லும் மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையைத் தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால், என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, என் தந்தையின் பாதங்களை தொட்டு ஆசி வாங்கி திருமணத்திற்கு வரவேற்றார்" என கூறியுள்ளார்.