maaveeran second single released

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடலான ‘ஸீனா ஸீனா’ லிரிக் வீடியோ ஆகியவை முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

Advertisment

இப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் தனது டப்பிங் பணியை முடித்தார் சிவகார்த்திகேயன்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையிலே...' லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் பாடியுள்ள இப்பாடலைப் பார்க்கையில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரமும் அதிதி ஷங்கர் கதாபாத்திரமும் காதலிக்க, அதை ஜாலியாக சொல்லும் பாடலாக அமைந்துள்ளது. யுகபாரதி வரிகளில் 'யார் சொன்னாலும் கேக்கல... சும்மாவே மாப்ள... தன்னால டாலடிச்சான். இப்போ சந்தோசம் தாங்கல...ஆனாலும் தூங்கல என்னான்னு கேளு மச்சான்" என வரும் வரிகள் ரசிக்கும் படியாக உள்ளது.