Skip to main content

அப்பாடா...! தொடங்கியது மாநாடு படப்பிடிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி 

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஒரு வருடமாக நடைபெறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அதன்பின் படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

 

cda

 

 

இதையடுத்து மீண்டும் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பின் மீண்டும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் பூஜையோடு இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் படக்குழு, பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் இன்ப அதிர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

zcS

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? ; தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

What is the total collection of Simbu film? ; Producer Official Notice

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  

 

இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் என தெரிவித்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது, அதன் உரிமையை டகுபதி சுரேஷ் பாபு கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.       

 

 

Next Story

"அன்னைக்கு முடியல அதுனாலதான் இன்னைக்கு வந்தேன்" - சிம்புவின் சர்ப்ரைஸ் விசிட் !

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

silambarasan talk about maanaadu 100days

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில் சென்னையில் 'மாநாடு' படம் ஓடிக்கொண்டிருக்கும் ரோகினி திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அங்கு ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, "'மாநாடு' படம் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னுடைய வெற்றி அல்ல. தமிழ் சினிமாவிற்கும், 'மாநாடு' படக்குழுவினருக்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர்,"நீங்கள் ரசிகர்களை சந்திப்பதாக இருந்த நிலையில் அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது ஏன் எனக் கேட்க, அதனால் தான் இன்னைக்கு வந்தேன் என சிம்பு பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர்.