Skip to main content

மாநாடு சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி மாற்றம்!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021
vfdbdbd

 

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சொன்ன தேதியில் மாநாடு படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார். மேலும் அதில்...

 

"நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது 'மாநாடு' படத்தின் முதல் சிங்கிள் பாடல் நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு தேதியில் முதல் சிங்கிள் பாடல் வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே" என பதிவிட்டுள்ளார். 

 

வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? ; தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

What is the total collection of Simbu film? ; Producer Official Notice

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  

 

இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் என தெரிவித்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது, அதன் உரிமையை டகுபதி சுரேஷ் பாபு கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.       

 

 

Next Story

"அன்னைக்கு முடியல அதுனாலதான் இன்னைக்கு வந்தேன்" - சிம்புவின் சர்ப்ரைஸ் விசிட் !

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

silambarasan talk about maanaadu 100days

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில் சென்னையில் 'மாநாடு' படம் ஓடிக்கொண்டிருக்கும் ரோகினி திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அங்கு ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, "'மாநாடு' படம் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னுடைய வெற்றி அல்ல. தமிழ் சினிமாவிற்கும், 'மாநாடு' படக்குழுவினருக்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர்,"நீங்கள் ரசிகர்களை சந்திப்பதாக இருந்த நிலையில் அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது ஏன் எனக் கேட்க, அதனால் தான் இன்னைக்கு வந்தேன் என சிம்பு பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர்.