Skip to main content

"சமஸ்கிருதமும் தமிழும் பயன்படுத்தப்பட்டது" - அஜித் பட தீம் சாங் குறித்துப் பாடலாசிரியர் விவேகா

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

lyricist vivekha shared about making of ajith veeram theme music

 

தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார் பாடலாசிரியர் விவேகா. இவரை நக்கீரன் ஸ்டுடியோஸ் 'பாட்டு கதை' நிகழ்ச்சி சார்பாக சந்தித்தோம். அப்போது பல நிகழ்வுகளைக் குறிப்பிட்ட அவரிடம், அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் 'ரத கஜ துரக...' என ஆரம்பிக்கும் தீம் சாங் உருவான விதம் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர் பதிலளித்தவை பின்வருமாறு, 

 

ad

 

"வீரம் படத்தில் எல்லா பாடல்களும் நான் தான் எழுதியிருந்தேன். எனக்கும் இயக்குநர் சிவாவுக்கும் 'சிறுத்தை' படத்திலிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. இப்படத்தின் கதையை முழுவதுமாக முன்கூட்டியே அவர் என்னிடம் சொல்லிவிட்டார். பாடங்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, படத்திற்கு உதவுகிற பாடல்கள். இன்னொன்று படத்தின் கதையோட்டத்திற்குத் தேவைப்படுகிற பாடல்கள். இந்த 'ரத கஜ துரக' பாடலின் தேவை என்னவென்றால் ஹீரோ அடிபட்டு விழுந்து கிடக்கிற சூழலில் ஆக்ரோஷமாக எழுந்து நிற்பது போல் ஒரு காட்சி. அந்த சூழலுக்கு ஒரு மந்திரம் போல் வார்த்தைகள் இருந்தால் நன்றாக இருக்குமென்று இயக்குநர் எதிர்பார்த்தார். மேலும் சாதாரண வார்த்தைகளால் இல்லாமல் ஒரு வார்த்தைகளைக் கேட்கும்போது வேறொரு உணர்வு வரவேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு. 

 

அதனால் அதற்கு மிகச் சரியாக சமஸ்கிருதமும் தமிழும் பயன்படுத்துவது மூலமாக ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்க முடியும் என்று நான் நினைத்தேன். இந்தப் பாடல் ஸ்டுடியோவில் எழுதப்பட்டதுதான். ரீரெக்கார்டிங் வர இடத்தில் ஒரு பாடல் வைக்கலாமா என்று கேட்டவுடன், உடனே ஓகே சொல்லிவிட்டு ஸ்டுடியோவில் எழுதப்பட்ட பாடல்தான் இப்பாடல். கம்போஸ் பண்ணிட்டு திரையில் பார்க்கும் போது அது மிகவும் நன்றாக இருந்தது. கதையோட்டத்திற்கு உதவுகிற பாடலாக நாங்கள் செய்தது. படத்தினுடைய விளம்பரத்திற்கு மிகப் பெரியளவில் உதவியது இப்பாடல்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.