Skip to main content

ரஜினியின் காலாவிற்காக விவேக் பாடிய பாடல் !

Published on 08/05/2018 | Edited on 09/05/2018
vivek

 

 


ரஜினியின் 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 9ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் பாடல் வெளியீட்டின் ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழ் பதிப்பில் மொத்தம் 9 பாடல்களும், மற்ற மொழி பதிப்புகளில் 8 பாடல்களும் இடம்பெற்றுள்ன என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் ஒரு பகுதியை பாடியிருப்பதில் மகிழ்ச்சி என்று பாடலாசிரியர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வரிகளுக்காக நான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை' - ரஜினிகாந்த்  

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
rajini


பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜூன் 7ஆம் தேதி வெளியான ரஜினியின் 'காலா' படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இதில் ரஜினி நில உரிமைக்காக போராடுபவராக நடித்துள்ளார். இதையடுத்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் டார்ஜிலிங் சென்று அங்கு படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி அங்குள்ள செய்தியாளர்களிடம் காலா குறித்தும், இப்படத்தை குறித்தும் பேசியபோது... "காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது" என்றார். மேலும் தான் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே சென்னை திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


 

Next Story

'காலா' - விற்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை 

Published on 13/06/2018 | Edited on 14/06/2018
kaala


சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியான 'காலா' படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதற்கிடையே 'காலா' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.