Skip to main content

"அவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்" - லவ் டுடே பட இயக்குநர்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

love today director pradeep ranganathan thanked director balasekaran

 

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் ரூ.60 கோடியைத் தாண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அங்கேயும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லவ் டுடே என்ற தலைப்பை உருவாக்கிய முதல் நபருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள். தலைப்பிற்கு நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியானது 'லவ் டுடே' படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லா சோஃபாவும் எல்.ஐ.சி படத்தில் இருக்கும்” - வீடியோ வைரல்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
viral sofa child in vignesh shivan lic movie

இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கி, பின்பு படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 

இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக விவசாயி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் தொடங்கியது. 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சோஃபா விற்று பிரபலமான நிஃப்யா ஃபர்னிச்சர் முகமது ரசூல் என்ற சிறுவன், இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன், அச்சிறுவன் இருக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அச்சிறுவன், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், ரவிவர்மன் உள்ளிட்ட சில நடிகர்களை சோஃபாவாக பாவித்து, கிண்டல் செய்வது போல் ஜாலியாக பேசுகிறான். இறுதியில், “ இது எல்லா சோஃபாவும் வேணும்னா, எல்.ஐ.சி படத்தை பாருங்க. எல்லா சோஃபாவும் அதில் இருக்கும்” என கூறுகிறான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story

“மதியம் 3 மணி முதல் அதிகாலை 3 மணி வரை” - எல்.ஐ.சி குறித்து எஸ்.ஜே.சூர்யா

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
sj surya  about lic movie

இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கதாநாயாகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். 

இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யாஇப்படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “படத்தின் தலைப்பு எவ்வளவு சுவாரசியமாக உள்ளதோ, படமும் அப்படி இருக்கும். நேற்று மதியம் 3 மணி முதல் அதிகாலை 3 மணி வரை எல்.ஐ.சி படத்திற்காக 12 மணிநேர தொடர்ச்சியான ஒர்க் ஷாப் இருந்தது. அதில் நான், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மூவருக்குள்ளும் அற்புதமான உரையாடல்.  விக்னேஷ் சிவன் லவ், காமெடி, பொழுதுபோக்கு என அனைத்தும் நிறைந்த புது காதல் உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வதில் மும்முரமாக உள்ளார். அதற்காக தன்னால் முடிந்த உழைப்பை செய்து வருகிறார். ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது . விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்றார்.