2017ஆம்-ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்லோகேஷ்கனகராஜ். முதல் படத்திலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார்.இதனைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் 'கைதி' மற்றும் விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படங்கள் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லவரவேற்பைப்பெற்றது.இதனைத்தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள 'விக்ரம்' படம், சில வாரங்களுக்கு முன் வெளியாகிவெற்றிகரமாகத்திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் ரசிகர்களின்பேராதரவைப்பெற்று தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடியும் உலகம் முழுவதும் ரூ.275 கோடியும்வசூலித்துள்ளதாககூறப்படுகிறது.
இந்நிலையில்லோகேஷ்கனகராஜ், பிரபல தெலுங்கு நடிகர்அல்லுஅர்ஜுனை வைத்து தெலுங்கில் ஒரு படம்இயக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகர்களானராம்சரண்,ஜூனியர்என்டிஆர்மற்றும்பிரபாஸ்ஆகியோரிடம்லோகேஷ்கதை சொல்லியுள்ள நிலையில் தற்போதுஅல்லுஅர்ஜுனிடம் ஒரு கதை சொல்லிஓகேவாங்கிவிட்டதாககூறப்படுகிறது. மேலும் இப்படம் பெரியபட்ஜெட்டில்பான்இந்தியா படமாக உருவாகவுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
இதனிடையேலோகேஷ்கனகராஜ் 'விக்ரம்' படத்தை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இதற்கானஅதிகாரப்பூர்வஅறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றனர். விஜய்யின் 'தளபதி 67' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாகஅல்லுஅர்ஜுன் படத்தைலோகேஷ்இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.