Advertisment

"பெரிய எதிர்பார்ப்பு உள்ள படங்களுக்கு நடப்பது தான்" - லோகேஷ் கனகராஜ்

lokesh kanagaraj about leo movie release issue

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை (19.10.2023) வெளியாகிறது.

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது. பின்பு படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது.

Advertisment

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் குழு 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த உள்துறை செயலாளர் அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே தமிழகம் முழுவதும் 9 மணிக்கே முதல் காட்சி தொடங்குகிறது.

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கி முதல் நாள் முழுவதும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் பேசுகையில், "லியோ படம் உருவாக காரணமே மாஸ்டர் படம் தான். அது ஒரு வெற்றியை அடைந்த பிறகு 100 சதவீதம் இந்த படம் என்னுடைய பாணியில்எடுக்கலாம் என முடிவெடுத்தோம். அதற்கு முழு காரணம் விஜய் தான். முழு சுதந்திரமும் கொடுத்தார். இந்த படத்தில் அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகமாக இருந்தது.

விஜய் படம் ரிலீஸாகும் போது ஏதோ ஒரு சின்ன சின்ன பிரச்சனை இருந்து தான் வருகிறது. அதனால் யாருக்கோ ஏதாவது சின்ன வருத்தம் இருக்கும். உதாரணமாக ட்ரைலரில் பயன்படுத்திய வசனம் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முழுக்க முழுக்க நான்தான்பொறுப்பு. அந்த கதாபாத்திரம்அந்த வசனம் பேசினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். விமர்சனம் வந்த பிறகு ட்ரைலரில் அந்த வசனத்தை மியூட் செய்துவிட்டோம். படத்திலும் அதை தவிர்த்து விட்டோம். இது இல்லையென்றால் வேறொரு விதத்திலும்பிரச்சனை வந்திருக்கலாம். அது அவர் படங்களுக்கு நடக்கிறது. மாஸ்டர் பட டைமிலிருந்து பார்த்து வருகிறேன். அது ஏன் என்று தெரியவில்லை.

ரஜினி படத்தை இயக்குவதை விட மகிழ்ச்சி எதுவும் இல்லை. சினிமாட்டிக் யுனிவர்ஸ் நான் மட்டுமே எடுக்க ஆர்வம் காட்டினால் அது நடக்காது. நடிகர்களும் ஈடுபட வேண்டும். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒத்துழைக்க வேண்டும். சாதாரண ஒரு படத்திலிருந்து ஒரு சின்ன விஷயத்தை பயன்படுத்தும் போது ஆட்சேபனை எதுவும் இல்லை என்ற சான்றிதழ் வாங்க வேண்டும். ஆனால் நிறைய கதாபாத்திரங்களை ஒன்று சேர்க்கும் போது நிறைய விஷயங்கள் இருக்கிறது.

படம் எடுப்பது மட்டும் தான் என்னுடைய கைகளில் இருக்கிறது. அதை ரிலீஸ் செய்வது தயாரிப்பு நிறுவனத்திடம் தான் இருக்கிறது. எப்போதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ள படங்களுக்கு நடப்பது தான்.இரவுக்குள் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

lokesh kanagaraj actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe