Skip to main content

டைட்டில் சொன்ன இயக்குநர் சந்தோஷிற்கு ஒரு லட்சம் பரிசளித்த லிங்குசாமி - ’ தி வாரியர்’ டைட்டிலின் சுவாரசிய பின்னணி

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Lingusamy

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

இந்த நிகழ்வில் ’தி வாரியர்’ படத்திற்கான டைட்டில் உருவான விதம் குறித்து பேசிய லிங்குசாமி, “ஷூட்டிங் போவதற்கு முன்பாக டைட்டில் முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொருத்தராக ஒரு டைட்டில் சொன்னார்கள். எதுவுமே செட்டாகவில்லை. பப்ளிசிட்டி வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் சீக்கிரம் டைட்டில் சொல்லுங்கள் என்று தயாரிப்பாளரும் கேட்டார். அதன் பிறகு, டைட்டில் சொல்பவர்களுக்கு ஒரு லட்சம்னு சொல்லலாமா என்று கேட்டார். பின் அதை அறிவித்ததும் உதவி இயக்குநர்கள் வரிசையாக டைட்டில் சொன்னார்கள். ’மனசெல்லாம்’ பட இயக்குநர் சந்தோஷ் என்னுடன் இருந்தார். அவரிடம் டைட்டில் சொல்லி இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்வார். வரிசையாக ஒவ்வொரு டைட்டிலையும் நிராகரித்தார். நான் நூறு டைட்டில் கார்டு எழுதியவன் என்ற முறையில் சொல்கிறேன், இதுவெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஒருநாள், நான் ஒரு டைட்டில் சொல்லலாமா என்று சந்தோஷ் கேட்டார். நான் சரி சொல்லுங்கள் என்றதும் வாரியர் என்றார். இந்தப் படத்திற்கு அதைவிட பொருத்தமான டைட்டில் வைக்க முடியாது. அதனால் ஏற்கனவே சொன்னபடி ஒரு லட்ச ரூபாயை இந்த விழாவில் வைத்து சந்தோஷிற்கு வழங்குகிறேன்" என்றார்.

 

மனசெல்லாம் படத்தை இயக்கிய சந்தோஷ், தேர்ந்த ஓவியரும் புகைப்படக் கலைஞரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆக்‌ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கிய படம்” - விஷால் நெகிழ்ச்சி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
vishal about 18 years of sandakozhi

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களைத் தாண்டி படத்தின் பிண்ணனி இசை இன்றளவும் பேசப்படுகிறது. மேலும் விஷால் கரியரில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 

இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் கடக்கிறது. இதை முன்னிட்டு விஷால் அவரது எக்ஸ் பக்கத்தில், “18 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2005 அன்று வெள்ளித்திரையில் சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்கு (சாமி), அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) நான் வணங்கி நன்றி கூறுகிறேன். இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் இந்த கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.

Next Story

“2015 வெள்ளத்தை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்...” - லிங்குசாமி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

lingusamy about cyclonemichaung

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் லிங்குசாமி, தமிழ்நாடு அரசையும் சென்னை மாநகராட்சி ஊழியர்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மூன்று நாட்களாக தஞ்சாவூரில் இருந்ததால், சென்னை வர விமானங்கள் இல்லை. சென்னை நிலவரத்தைப் பார்த்து கவலையடைந்தேன். நேற்றிரவு நான் திரும்பி வந்தபோது, அடையாறில் ஒருவரை ட்ராப் செய்ய போயிருந்தேன். விமான நிலையத்திலிருந்து அடையாறு மற்றும் வளசரவாக்கம் திரும்பும் அனைத்து வழிகளிலும், தமிழக அரசு, அதிகாரிகள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது” எனக் குறிப்பிட்டு சென்னை மாநகராட்சியை டேக் செய்திருந்தார். 

 

மேலும், “2015 வெள்ளத்தை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இது சரியான திசையில் முன்னேற்றம் என்று கூறலாம். தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து பலரை மீட்பதில் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் விரைவில் நகரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். இதற்கு என்னால் இயன்ற வழிகளில் நகர அதிகாரிகளுக்கு உதவ விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

இதனிடையே பார்த்திபன் மற்றும் தங்கர் பச்சான் ஆகியோரும் மிக்ஜாம் புயல் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். பார்த்திபன், “கட்சி பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இதுபோன்ற இடர் காலங்களில் அக்கம் பக்கம் உள்ள இளைஞர்கள், தாய்மை நிறைந்தவர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளே தண்ணீருக்கிடையில் தாகம் தீர்ப்பதாகும். அப்படிப்பட்ட ரியல் ஹீரோ/ ஹீரோயின் அனைவரின் பாதம் தொட்டு நன்றியுடன் வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

தங்கர் பச்சான், “மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதுதான் உண்மையான அரசியல் பணியாகும். இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலைமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான், உங்களை உயர்த்திவிடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றிக் கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தனர்.