Skip to main content

"இதை ஒரு அனுபவமாகவே பார்க்கிறேன்" - விசாரணைக்கு பிறகு விஜய் தேவரகொண்டா பேச்சு

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

liger movie issue vijay devarakonda spech after ED investigation

 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் 'லைகர்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வி அடைந்துள்ளது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகை சார்மியிடமும் பூரி ஜெகன்நாத்திடமும் நஷ்ட ஈடு கேட்க, அவர்களைச் சந்திக்க மறுத்த சார்மி, தனக்கும் கடுமையான பண இழப்பு என்றும், நஷ்ட ஈடு தர வாய்ப்பில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. 

 

பின்பு, "பணத்தை நிச்சயம் மரியாதை நிமித்தமாக திருப்பி தருகிறேன். ஆனால், அந்த மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் ஒரு பைசா கூட தரமாட்டேன்" என பூரி ஜெகன்நாத் தெரிவித்திருந்தார். இதனிடையே லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், லைகர் படத்தின் தயாரிப்புக்காக தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் சிலர் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்திற்காக ஹவாலா பணத்தை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இது தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை 12 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் தேவரகொண்டா, "பெரும் புகழடைவதன் மூலம் இது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இதை ஒரு அனுபவமாகவே பார்க்கிறேன். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்ததும் நேரில் சென்று ஆஜராகி என் கடமையைச் செய்தேன். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தேன்" என்றார்.    

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பைத்தியம்’ என்று திட்டியதால் ஆத்திரம்; தாயை கொடூரமாகக் கொலை செய்த மகன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
lost her lives his mother for Rage at being called crazy in delhi

டெல்லி அருகே குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரானுஷா (59). இவருக்கு கணவர் மற்றும் மகன் அத்ரிஷ் (27) ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். மகன் அத்ரிஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அத்ரிஷ், தனது பெற்றோரிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (10-03-24) இரவு ரானுஷாவுக்கும், அத்ரிஷுக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அத்ரிஷ், அங்கு இருந்த கத்தியை வைத்து தனது தாய் ரானுஷாவை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அத்ரிஷ், தனது வீட்டுக்கும் தீ வைத்துள்ளார். இதனைக் கண்டு பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வீட்டுக் கதவை உடைத்து ரானுஷாவை மீட்டனர்.

கத்திக்குத்து காயம் மற்றும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரானுஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அத்ரிஷ் அடிக்கடி தாயுடன் சண்டைபோட்டு அவரைத் தாக்கி வந்துள்ளார்.

அந்த வகையில், நேற்று நடந்த வாக்குவாதத்தின் போது ‘பைத்தியம்’ என்று ரானுஷா அத்ரிஷை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அத்ரிஷ், தனது தாயை கத்தியால் கொலை செய்ததும், பின்னர் வீட்டுக்குத் தீ வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, தனது தாயை கொலை செய்த அத்ரிஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபர் கொலை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Freelance photographer incident; Shocked by the police investigation

வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரை ஆர்டர் செய்த இளைஞர்கள், போட்டோ எடுக்க வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்து அவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்குமார் (23). புகைப்படக் கலைஞராக இருக்கும் சாய்குமார் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு போட்டோகிராபி செய்து கொடுக்கும் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

Freelance photographer incident; Shocked by the police investigation

இந்தநிலையில், சாய்குமாரை தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்து தர வேண்டும் என அழைத்துள்ளனர். கோணசீமா மாவட்டம் ரவுலாபாலம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதாக சாய்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சாய்குமார் விலையுயர்ந்த கேமரா, புகைப்பட உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சாய்குமார் வீடு திரும்பாததால் சாய்குமார் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சாய்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த கேமராக்களை பறித்த கும்பல் அவரை மணல் பரப்பில் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.