Skip to main content

இந்த படம் வெளியாகும் என்று என் அம்மாதான் நம்பினாங்க- கண் கலங்கிய தயாரிப்பாளர்

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

சின்னத்திரையில் வேட்டையன் என்ற பெயரில் கொடி கட்டி பறந்த கவின் முதன் முதலாக வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. இத்திரைப்படம் கடந்த ஒரு வருடமாக திரைக்கு வருவதாக காத்திருந்து, கடந்த 17ஆம் தேதிதான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறைந்த அளவிலான திரைகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் பெற்ற வரவேற்புக்கு பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 

raveendran

 

 

இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்,“இந்தப் படத்தை வெளியிடவே முடியாது எனக்கூறியவர்கள் தான் அதிகம். வெளியிட முடியும் என்று நம்பிய ஒரே ஆள் என் அம்மா தான்.
 

natpuna enaanu theriyuma


தற்போது படத்துக்கு ஊடகங்கள் கொடுத்த வரவேற்பால்தான் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்துள்ளனர். புது ஹீரோ தான் வேண்டுமென்று படம் எடுத்தால் எனக்கு இங்கு படம் காட்டுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறுவதற்கு ஹீரோ தான் முக்கியம் என்கிறார்கள். அப்படி படம் எடுக்கவில்லை என்றால் நான் மீண்டும் தோற்றுப் போவேன் என்கிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் தோற்று தோற்று மிகப்பெரிய தயாரிபாளராய் வருவேன்” என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''தல படத்தை நம்புனேன்...தகுதி இல்லனு சொல்லிட்டாங்க'' - தயாரிப்பாளர் ரவிந்திரன் ஆதங்கம் 

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் தயாரிப்பாளரும், 'கூர்கா' படத்தின் விநியேகஸ்தருமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிந்திரன் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படம் குறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசும்போது....

 

Ravindran

 

''விநியேகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்தில் அஜித் நடித்திருக்கும் நேர அளவு குறித்தும், படத்தின் கண்டன்ட் குறித்தும், வணிகரீதியான பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை இப்படம் குறித்து எங்கு விசாரிக்க வேண்டுமோ அங்கு விசாரித்ததில் படம் அல்டிமேட்டாக உள்ளது. இது படத்தின் உண்மையான, மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து எனக்கு கிடைத்த தகவல். இப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்று எனக்கு நம்பிக்கை இருந்ததால் விநியேக உரிமைக்கு தொடர்புகொண்டேன். யாருக்கும் இல்லாமல் எனக்கு மட்டும் படத்தை விநியேகம் செய்ய பல்வேறு கண்டிஷன்கள் போட்டாரகள். 

 

 

குறித்த நேரத்தில் அட்வான்ஸ் கொடுக்கவேண்டும், ஒப்பந்தம் போடாமல் வெறும் லெட்டர் ஹெட்டில் தான் தருவோம் எனவும், என்னுடைய லோகோவை பயன்படுத்த கட்டுப்பாடு, அதிக விலை என பல்வேறு கட்டுப்பாடுகளை நான் சந்தித்தேன். இத்தனைக்கும் படத்தை நான் அதிக விலைக்கு கேட்டும் பார்த்தேன். அது நடக்கவில்லை. இது ஏன் எனக்கு மட்டும் என பார்த்தால் அஜித் படம் பண்ண எனக்கு என்ன தகுதி இருக்கிறது என பார்க்கிறார்கள். இது என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. என்னுடைய கம்பெனி சின்ன படங்கள் மட்டும் விநியேகம் செய்யாது என நிரூபிக்கவே முயற்சி செய்தேன். எனக்கென்று சில ஆக்கபூர்வமான ஐடியாக்கள் இருந்தது. அதன்படி இப்படம் கிடைத்திருந்தால் கொண்டாடி இருப்பேன். தல படம் என்னை கைவிடாது என நம்பிக்கையோடு இருந்தேன். இருந்தாலும் இப்படம் யாரிடம் சென்றாலும் சரி, படம் நன்றாக வந்துள்ளது. இது மாபெரும் வெற்றிபெறுவது உறுதி" என்றார்.  

 

Next Story

'டிவி ல இருந்து வரவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆக முடியாது' - தயாரிப்பாளர் ரவீந்திரன் தாக்கு

Published on 23/05/2019 | Edited on 23/05/2019
ravi

 

விஜய் டிவி புகழ் கவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் தியேட்டர் உரிமையாளர்கள் குறித்தும், தன் படக்குழு குறித்தும் கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில் இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்து பேசியபோது.... "ஸ்டார் வேல்யு இல்லாத எவ்ளோ படங்கள் இங்கு வெளியாகி ஜெயித்திருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஏதோ ஒரு பின்புலத்தோடு வெளிவந்தவையாகும். என் படத்திற்கு அப்படி ஏதும் அமையவில்லை. இருந்தும் வணிகரீதியாக இல்லையென்றாலும் என் படம் நல்ல பெயர் வாங்கியுள்ளது. இரண்டு பெரிய நிறுவனங்களோடு நான் இங்கு மோதி நிற்கிறேன். என் பட நாயகனும் கூட தான் நல்ல நிலையில் இருக்கும்போது இப்படத்தை ரிலீஸ் செய்திருந்தால் தனக்கு நல்ல நிலை கிடைத்திருக்கும் என வருத்தப்பட்டார். 

 

 

இப்படி நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். என் சக நண்பர்கள், யாருமே பட வெளியிடாத நாளில் என் படத்தை ரிலீஸ் செய்ய சொன்னார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமையும் என எதிர்பார்த்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இனியும் பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து தான் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் செய்தேன். இதையெல்லாம் யாரும் புரிந்து கொள்வதில்லை. டிவியில் இருந்து வரவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆக முடியாது. அவரின் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்கள் வெளிவந்த போது அவரை நான் பெரிய ஹீரோவாக பார்க்கவில்லை. ஆனால் எதிர்நீச்சல் படம் வெளியானபோது அவரை ஹீரோ என்ற அந்தஸ்தை தாண்டி ஒரு ஸ்டாராக பார்த்தேன். அதற்கு காரணம் அவருக்கு உறுதுணையாக நின்ற அனிருத், தனுஷ், நயன்தாரா ஆகியோர் தான். இதையெல்லாம் தாண்டி சிவகார்திகேயனுடைய உழைப்பு, அவமானங்கள், தாண்டி வந்த படிகளே அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். எனக்கும் இதுபோல் உறுதுணையாக நிற்க கண்டிப்பாக யாரேனும் வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை என் பணியை விடா முயற்சியோடு சிறப்பாக செய்வேன்" என்றார்.