Skip to main content

அப்பா சொன்ன தாரக மந்திரம்; பின்பற்றும் லியோ சிவக்குமார்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

 Leo sivakumar interview

 

'அழகிய கண்ணே' படத்தில் நடித்த ஹீரோ லியோ சிவக்குமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

இந்தப் படத்தில் உடன் நடித்த சஞ்சிதாவிடம் எதைப் பற்றி கேட்டாலும் தியானம் செய்யுங்கள் என்று சொல்வார். தியானத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு அவருக்கு. அப்பா திண்டுக்கல் லியோனியைப் பொறுத்தவரை அவர் மேடையில் எப்படி இருப்பாரோ அதேபோல் தான் வீட்டிலும் இருப்பார். மிகவும் ஜாலியான மனிதர் அவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். வீடு முழுக்க புத்தகங்களாகத் தான் இருக்கும். அவருடைய படிக்கும் பழக்கம் தான் அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்துள்ளது. அப்பாவின் ஆசீர்வாதத்துடன் தான் சினிமாவுக்கு வரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி முடித்து சினிமாவுக்கு வரவேண்டும் என்று நான் சொன்னபோது, முதலில் இந்த உலகை நான் புரிந்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொன்னார். எனவே சிறிது காலம் எடுத்துக்கொண்டு பல விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். 

 

காமெடி, சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சிதாவுடன் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகளில் தான் நிறைய சிரமப்பட்டேன். சூது கவ்வும் படம் போல் இந்தப் படமும் சஞ்சிதாவுக்கு மிகப்பெரிய பிரேக்காக இருக்கும். இந்த படத்தில் உடன் நடித்த விஜய் சேதுபதி சார் இந்த நிமிடம் வரை எதற்கும் மறுப்பு தெரிவித்ததில்லை. அவருடைய சப்போர்ட் மிகப் பெரியது. அவருடைய ஆபீஸில் ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்து, அவருடைய சொந்த காஸ்டியூமில் வந்து நடித்துக் கொடுத்தார். நல்ல மனிதர் அவர். 

 

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் சார் சூப்பராக ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவர் பாடிய பாடலில் நான் நடிப்பது பெருமையான விஷயம். ரகுநந்தன் சாரின் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. என்னுடைய பொறுப்பு அதிகமாகியுள்ளது. கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்பது ஆசை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.