இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், சிவாஜி கணேசனின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
மேலும், “என்றென்றும் நம் நினைவில் வாழும் செவாலியர் சிவாஜி கணேசனின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம் பிரபுவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.