ADVERTISEMENT

'ரஜினி துரோகம் பண்ணிட்டார்ன்னு யாரும் சொல்ல முடியாது' - ராகவா லாரன்ஸ் 

04:55 PM Feb 19, 2019 | santhosh

ADVERTISEMENT

'அகவன்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்பு செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், கராத்தே தியாகராஜன், ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் ரஜினி குறித்து பேசும்போது...

ADVERTISEMENT

"உலகத்திலேயே என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று சொல்வார். அதேமாதிரி இப்பட தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஜெயித்து காட்டியிருக்கிறார். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். அவர் துரோகம் பண்ணிட்டார்ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போதுகூட அவரிடம் நான் அதைப் பற்றி கேட்டால்...தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துப்பார்னு சொல்லிடுவார். எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT