Advertisment

போயஸ் கார்டன் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த் !

soundarya

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகனை சவுந்தர்யா மணக்கவுள்ளார். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் விசாகணும் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். மேலும் இவர் வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். வரும் 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடக்கவுள்ள இத்திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் திருமண தேதி நெருங்கி வருவதால் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில்...."வரும் 10-ந் தேதி அன்று எங்களது மகள் சவுந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் வரும் பிப்ரவரி 10-ந் தேதி மதியம் 3.10 வரை மாப்பிள்ளை அழைப்பும், 12-ந் தேதி வரவேற்பும் நடைபெற உள்ளதால், இந்த கல்யாண விழாவில் மிக முக்கிய பிரபலங்களான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Soundarya Rajinikanth ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe