Skip to main content

பழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

yogesh kaur

பழம் பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 77. உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள லக்னோவில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர். 
 


கடந்த வெள்ளிக்கிழமை அன்று மறைந்த பாடலாசிரியர் 60 மற்றும் 70 களில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். 

இந்நிலையில் அவருடன் இணைந்து பணிபுரிந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "யோகேஷ்ஜி மரணமடைந்த செய்தி தற்போது தான் எனக்குத் தெரியும். மக்களின் மனம் கவர்ந்த பல பாடல்களை அவர் எழுதியுள்ளார். மிகவும் அமைதியான கண்ணியமான மனிதர்" எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று  கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி! 

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Prime Minister Narendra Modi remembers Lata Mangeshkar on her birthday!

 

லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அயோத்தியில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

 

இந்தியாவின் இசை குயில் என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தி நகரில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, சாலை உருவாக்கப்பட்டு, லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளான இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் உள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்திய ஆளுமைகளின் ஒருவரான அவருக்கு இது பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்று கூறியுள்ளார். 


 

Next Story

''தெய்வீகக் காந்தர்வ குரலால் மக்களை தன்வசம் வைத்திருந்தவர்''-இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல்! 

Published on 06/02/2022 | Edited on 06/02/2022

 

'' The one who was seduced by the voice of the Divine Gandharva '' - Composer Ilayaraja

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) காலமான நிலையில் இறுதி மரியாதை நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், சுமார் ஒரு மாதமாகச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

 

தமிழில் மிகச் சில பாடல்களையே பாடியிருந்தாலும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் லதா மங்கேஷ்கர். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் வெளியான 'சத்யா' என்ற திரைப்படத்தில் 'வளையோசை கலகலகலவென' என்ற பாடல் தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.

 

இந்நிலையில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இளையராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், 'தெய்வீகக் காந்தர்வ குரலால் மக்களையெல்லாம் மயக்கி தன்வசம் வைத்திருந்தவர் லதா மங்கேஷ்கர். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவு என் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மங்கேஷ்கரின் மறைவைப் பேரிழப்பாக கருதுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.