Advertisment

கரோனா அச்சுறுத்தல் வெளிநாட்டில் நடைபெறும் மற்றொரு இந்திய பட ஷூட்டிங்...

amir khan

Advertisment

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இந்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் லால் சிங் சட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவருடைய கடந்த வருட பிறந்தநாளன்று வெளியிட்டார் அமீர்கான். இப்படத்தில் அமீருடன் பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெறும் கரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்று மாதங்களாக சினிமா பட ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இனி அடுத்து எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்பதும் கேள்வியாக உள்ள நிலையில், அமீர்கான் தனது படத்தின் ஷூட்டிங்கை துருக்கியில் வைத்துள்ளார். இதற்காக அவர் துருக்கி சென்றபோது அங்கிருக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

துருக்கி படப்பிடிப்பைதொடர்ந்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. கரீனா கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் இந்தபடத்தில் நடிக்கின்றனர். இந்த வருடம் கிறிஸ்துமஸ் வெளியீடாகதிட்டமிடப்பட்டிருந்த 'லால் சிங் சட்டா' தற்போது ஏற்பட்டுள்ள தாமதத்தால் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இந்த மாதத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘பெல்பாட்டம்’ படத்தின் சூட்டிங்லண்டனில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

amirkhan
இதையும் படியுங்கள்
Subscribe