Skip to main content

'விஜய் சேதுபதி தான் எங்கள் படத்தை காப்பாற்ற வேண்டும்' - லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

Published on 24/06/2019 | Edited on 24/06/2019
lr

 

 

விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் கே. ப்ரொடக்ஷன்ஸ், பாகுபலி தயாரிப்பாளர் ஆக்ரா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக சிந்துபாத் படம் கடந்த ஜூன் 21ந்தேதி வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் ஜூன் 28ந்தேதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையே லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படமும் ஜூன் 28ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி  சமூகவலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில்... "பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பேப்பரில் மட்டும் இருக்க கூடாது" - மகளிர் இட ஒதுக்கீடு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

lakshmy ramakrishnan about women reservation

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை  நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் முதல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த நிலையில், முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய நாடாளுமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். அதில் கங்கனா ரணாவத், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா உள்ளிட்ட சில நடிகைகள் அழைப்பை ஏற்று புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்டனர். மேலும் மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்றனர். 

 

இந்த நிலையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த மசோதா குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, "ரொம்ப நல்ல விஷயம். அதெல்லாம் ஓகே. அது வெறும் பேப்பரில் இருந்தால் மட்டும் போதாது. அதாவது புலி, சிங்கம், கரடி எல்லாத்தையும் பேப்பரில் வரைஞ்சு வச்சிவிட்டு எங்க வீட்டில் இவையெல்லாம் இருக்கு என சொல்வதில் பிரயோஜனம் இல்லை. அது செயலில் இருக்க வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் பெண்கள்தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஒதுக்கீடு இருந்தது. ஆனால் அந்த மாவட்டத்தில் இருக்கிற ஆண்களோட மனைவிகள், சகோதரிகள் என நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் ஆண்கள் தான். அந்த மாதிரி இல்லாமல் நிஜமாகவே பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும். 

 

முடிவெடுக்க வேண்டிய இடத்துக்கு பெண்கள் வந்தால்தான் பெண்களோட பிரச்சனையை அவர்களின் கோணத்தில் இருந்து பார்க்க முடியும். ஒரு சில சமயங்களில் ஆண்களுக்கு இருக்கிற உணர்வு கூட பெண்களுக்கு இருப்பதில்லை. எனக்கு தெரிந்து, கடந்த வருஷத்தில் 16வயசு குழந்தை 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு அதிகாரி அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகும் போது 6 கிலோ மீட்டர் உச்சி வெயிலில் நடக்க வச்சு 4 மாடி ஏற வச்சிருக்காங்க. அந்த அதிகாரி ஒரு பெண். ஒரு வேலை ஒரு ஆண் அதிகாரியாக இருந்தால் அந்த பெண்ணை ஆட்டோவில் கூட்டி போயிருப்பார். அதனால் இது வந்து ஒரு ஆண், பெண் என்பது இல்லை. நம்முடைய மன எண்ணம் அப்படி இருக்கிறது. எனவே இந்த 33 சதவீதம் வருவது நல்ல விஷயம். ஆனால் அது சரியாக செயலில் இருக்குமா என்பதை இனிமே தான் பார்க்க வேண்டும்" என்றார். 

 

 

Next Story

"அவர் சடலத்தை பார்க்க எனக்கு ஷக்தி இல்லை" - லட்சுமி ராமகிருஷ்ணன் உருக்கம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

lakshmi ramakrishnan about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அவர் கூறுகையில், "முதலில் அவருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆறுதல் என்பதை விட பிரார்த்தனைகள் என்று தான் சொல்வேன். யுத்தம் செய் படத்தில் தான் அவர் எனக்கு பரீச்சயம். அவர் நடிப்பை பார்த்து வியந்து போய் ஆரோகணம் படத்தில் அவரை தேர்ந்தெடுத்தேன். 

 

அதன் பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. பெரிய ஒரு நடிகராக பயணித்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு தடவையாச்சும் என்னையும், மிஷ்கினையும் கூப்பிட்டு நன்றி சொல்லுவார். எத்தனையோ நடிகர்களை பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலர் தான் தான் ஆரம்பிச்ச இடத்தை மனசில் வச்சிக்கிறது. அது ஒரு பெரிய விஷயம். அதே போல் அவர் ஒரு சிறந்த கலைஞர். மேலும் நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டர். அவரிடம் ஏன் படம் இயக்குவதில்லை என கேட்டேன். ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்வது ஒரு குழந்தையை டெலிவர் பண்ற மாதிரி. அந்த கஷ்டத்தை அவர் அனுபவிச்சார். எனக்கு இன்னொரு பாதை வந்திருக்கு. அந்த பாதையில் நான் பயணிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்றார். 

 

அதை ரசிச்சி ரசிச்சு பண்ணுவார். ஒவ்வொரு தடவையும் ஒரு வண்டி வாங்கினாலும், வீடு கட்டினாலும் அதை ரசிச்சு என்னிடம் சொல்லுவார். வாழ்க்கையை ரசிச்சி ரசிச்சு வாழ்ந்த ஒரு மனிதர். இன்னும் 40, 50 வருஷம் பயணிக்க வேண்டிய ஒரு மனிதர். திடீர்னு ஒரு விஷயம் காணாமல் போனதாக ஒரு ஷாக்கில் தான் எல்லாரும் இருக்கிறோம். அவரை பார்க்க நான் போகமாட்டேன். அதற்கான தைரியம் என்னிடம் இல்லை. தனியாக இருந்து பிரார்த்தனை பண்ணுவேன். 5 வருஷத்தில் என்னுடைய அக்காவையும், அம்மாவையும், அண்ணனையும் இழந்தேன். அதன் பிறகு எனக்கு சடலத்தை பார்க்க ஷக்தி இல்லை" என்றார்.