Advertisment

Choose the best title... போட்டி வைத்த கே.வி.ஆனந்த்...சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு !

kv anand

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, பாலிவுட் நடிகர் சிரக் ஜனி ஆகியோர் நடிக்கின்றனர். சூர்யாவின் 37வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் நிலையில் இப்படத்திற்கு தலைப்பாக மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பை படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட டைட்டிலை ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று வெளியிடவுள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளார்.

Advertisment

Surya uyirka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe