Advertisment

மீட்கப்பட்ட ட்விட்டர் கணக்கு! குஷியில் குஷ்பு!

dsgss

சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் நடிகை குஷ்பூ, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், குறிப்பாக ட்விட்டரில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திவந்தார். இவரது ட்விட்டர் கணக்கை 13 லட்சம் பேர் பின்தொடர்ந்துவந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ஹேக்கர்கள் அவரது கணக்கை ஹேக் செய்தனர்.

Advertisment

ஹேக் செய்யப்பட்ட இவரது ட்விட்டர் பக்கத்தின் பெயர் 'khushsundar' என்பதற்கு பதிலாக 'briann' என மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் ஹேக்கர்கள் அழித்துவிட்டனர். இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது குஷ்புவின் ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், குஷ்பு இதுவரை பதிவு செய்திருந்த அனைத்து பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளன. ட்விட்டர் கணக்கு திரும்ப கிடைத்துள்ளதால் குஷ்பு தரப்பு நிம்மதி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe