Skip to main content

வைரலான ஆடியோ! மன்னிப்புக் கேட்ட நடிகை குஷ்பு!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

kushbu


நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு பத்திரிகையாளர்களைத் தவறாகப் பேசியிருப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது குஷ்பு அதுகுறித்து தனது ட்விட்டர் பதிவுகளின் மூலம் விளக்கமளித்துள்ளார்.
 


அதில், “நான் பேசியதாகக் கூறப்படும் அந்த  ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர் குரூப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி உள்ளவர்கள் இருப்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது. எனது நோக்கம் ஊடகத்தை மரியாதை குறைவாகப் பேசுவது இல்லை. நண்பர்களுடன் பேசும் தொனியில் தான் பேசினேன்.

எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் ஒருமுறை கூட ஊடகத்துறையினர் முன் நான் மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது. அந்த வாய்ஸ் மெசேஜ் பாதியில் இருக்கிறது. ஆனால் அதனால் யாராவது புண்பட்டிருந்தால், எனது மன்னிப்புகள்.
 

 


துரதிர்ஷ்டவசமாக நீங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களே தான் உங்களை முதுகில் குத்தத் தயாராக இருக்கிறார்கள். எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்தார் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவரது பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. எனது பொறுமையும் மன்னிப்பும் அவருக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle in Trichy against Kushboo speech

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.