Skip to main content

''மீண்டும் தொடங்குகிறது சீரியல் ஷூட்டிங்..!'' - தேதியை அறிவித்த குஷ்பூ!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

fsa


கரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க சமீபத்தில் தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதி வழங்கியமைக்காகத் ஃபெப்சியும், தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஸ்டெப்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகை குஷ்பூ நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறித்தும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
 


"பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, சின்னத்திரை படப்பிடிப்புகள் நாளை முதல் தொடங்க தயாராக உள்ளது. பொது முடக்கம் காரணமாக 70 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். எங்கள் அன்றாட தினக்கூலித் தொழிலாளர்களின் முகங்களில் இறுதியாகப் புன்னகையைப் பார்க்க முடிகிறது. எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படும்.

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.சல்வமணி மற்றும் அவரது குழுவின் பெரும் ஆதரவு இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. எனது ஸ்டெப்ஸ் சங்க உறுப்பினர்களான சுஜாதா கோபால், பலேஸ்வர், ஷங்கர், பாலு மற்றும் எங்கள் தலைவர் சுஜாதா அவர்களுக்கு என் ஆரவாரமான நன்றிகள். ஒரு பாறை போல் எங்களுடன் துணை நின்ற எனது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி.
 


கடைசியாக தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மேலும் அரசு, தலைமைச் செயலகம் மற்றும் எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒவ்வொரு துளியும் ஒரு கடலை உருவாக்குகிறது. அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். கடின உழைப்பு, நேர்மை, நல்ல நோக்கங்கள் ஒருபோதும் தோல்வியடையாது" எனக் கூறியுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle in Trichy against Kushboo speech

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.