Skip to main content

"கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டுவாங்க சார்" - எச்சரிக்கும் குருதி ஆட்டம்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

kuruthi aattam trailer out now

 

கடந்த 2017ஆம் ஆண்டு ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

ad

 

இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஜானரில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் ஆசிரியராக வரும் பிரியா பவானி சங்கர் கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டுவாங்க என்று பேசுகிறார்.தற்போது உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால் ஏகப்பட்ட பிரச்சனையில் போய் முடியும் சூழலில் குருதி ஆட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாலாஜி சித்தப்பா” - அதர்வா உருக்கம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
atharvaa condolence danieal balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா உள்ளிட்டவரகள் இரங்கல் தெரிவித்ததை அடுத்து தற்போது டேனியல் பாலாஜியின் அண்ணன் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா, “வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொரு நாள் இது. நாம் இன்னும் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன். ஆழ்ந்த இரங்கல் பாலாஜி சித்தப்பா” என குறிப்பிட்டுள்ளார். மேலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Next Story

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.