புல்லட் சாங் ட்ரெண்டாக இதுதான் காரணமாம் - ரகசியம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி 

Krithi Shetty

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நாயகி கீர்த்தி ஷெட்டியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ’தி வாரியர்’ படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

”என்னுடைய கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே தமிழ் ரசிகர்களிடம் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. அது நானே எதிர்பாராதது. வாரியர் படத்தின் கதைக்களம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான களமாக இருக்கும். அப்படி ஒரு படத்தில் நடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி.

லிங்குசாமி சாரின் பையா படம் எனக்கு ரொம்பவும் பிடித்தமான படம். அவர் ஆபிஸில் இருந்து போன் வந்ததுமே உடனே ஓகே சொல்லிட்டேன். பின் அவர் கதை கூறியதும் அதை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ராம் பொத்தினேனி ஆக்டிங் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை நேரில் பார்த்ததும் ரொம்ப எக்சைட்டிங் ஆகிட்டேன். படம் பார்க்க நானும் ரொம்ப ஆர்வமா இருக்கேன். தமிழ், தெலுங்கு இரண்டிலுமே தனித்தனியே ஷூட் பண்ணோம். அதனால் டப்பிங் படம் மாதிரியெல்லாம் இருக்காது. லிங்குசாமி சார் இரண்டு ஆடியன்ஸின் பல்சும் தெரிந்தவர் என்பதால் படம் சிறப்பாக வந்துள்ளது.

புல்லட் சாங் இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்டாக வேண்டும் என்பதால் எல்லோரும் ஈசியாக ஆடக்கூடிய ஸ்டெப்ஸ் போடலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் என்ன நினைத்தோமோ சேகர் மாஸ்டர் அதை அப்படியே கொடுத்தார். இன்று எல்லா இடங்களிலும் புல்லட் சாங்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழ் ரசிகர்கள் படத்தை எப்படி கொண்டாடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களுடன் அமர்ந்து விசில் அடித்து படம் பார்க்க ஆவலாக உள்ளேன்.

பாலா சார் இயக்கத்தில் சூர்யா சாருடனும் நடிக்கிறேன். பாலா சார் இயக்கத்தில் நடித்தது என்னுடைய கேரியரிலேயே சிறப்பான அனுபவமாக இருந்தது. நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் நம்பிக்கை எனக்கு புதிதாக இருந்தது”. இவ்வாறு கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

krithi shetty
இதையும் படியுங்கள்
Subscribe