Skip to main content

'கழுகு 2' படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவின் புதிய அவதாரம் 

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
krishna

 

 

 

'தீதும் நன்றும்' படத்தை தொடர்ந்து என்.ஹெச்.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் ஹெச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் 'திரு.குரல்'. அறிமுக இயக்குனர் பிரபு இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கின்ற நிலையில் படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணா நடிக்க, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்க ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய,  வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - தியாகராஜன், ஸ்டண்ட் - ஹரி, நடனம் - ஸ்ரீ க்ரிஷ். படத்தை  விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாற்று படம் உண்டு...அஜித் படம் உண்டு..! - விஷ்ணுவர்தன் பிளானை சொன்ன கிருஷ்ணா #Exclusive 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019
Krishna

 

 

கிருஷ்ணா - பிந்து மாதவி இணைந்து நடித்து வெற்றிபெற்ற 'கழுகு' படத்தின் இரண்டாம் பாகமான 'கழுகு 2' படம் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கிருஷ்ணா நக்கீரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விஷ்ணுவர்தன் - அஜித் கூட்டணி படம் குறித்து பேசியபோது....''விஷ்ணுவர்தன் தற்போது ஒரு ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிய இன்னும் 6 முதல் 8 மாதங்கள் ஆகும். அண்ணனுக்கு வரலாற்று படம் இயக்கவும், அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணவும் ஆசை இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒரே படத்தில் நடக்குமா என்றால் அது எனக்கு தெரியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் சினிமாவை பற்றி வீட்டிலும், வெளியிலும் பேசிக்கொளவதில்லை'' என்றார். 

 

Next Story

கதைக்கு தேவைன்னா நிர்வாணமா நடிக்க தயார்..! - நடிகை அதிரடி 

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

கிருஷ்ணா - பிந்து மாதவி இணைந்து நடித்துள்ள கழுகு 2 படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்கிக்காக நடிகை பிந்து மாதவி நமக்கு அளித்த பேட்டியில் அமலாபால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து பேசியபோது...

 

bindhu

 

 

''ஆடை படத்தில் அமலாபால் செய்த தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஒரு சாதாரண வெகுளி பெண் கயவர்களின் பொறியில் சிக்கி தவித்து பின்னர் அவர் மேல் பாவம் ஏற்படுவதுபோல் கதைப்படுத்தாமல் படத்தின் ஆரம்பம் முதல் ஒரு தைரியான பெண்ணாக அமலாவை காண்பித்து அதன் பின் நடப்பதை சுவாரஸ்யமாகவும், பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வது மாதிரியும் காண்பித்தது அருமையாக இருக்கிறது. இந்த தைரிய முயற்சிக்காக அமலாபாலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. இதுபோல் நிர்வாணமாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயார். என்னை பொறுத்தவரை படம் வெற்றிபெற வேண்டும் அதற்காக நான் எந்த எல்லை வரை சென்று கடுமையாக உழைக்க தயார். அதற்கு ஏற்றார் போல் நல்ல கதையும் அமையவேண்டும்'' என்றார்.