‘கூச முனுசாமி வீரப்பன்’ - நக்கீரனின் பிரத்யேக வீடியோக்களோடு வீரப்பன் சொல்லும் வீரப்பனின் கதை

Koose Munisamy Veerppan review

தமிழகத்தின்பத்திரிகைத்துறை வரலாற்றில் வேறெந்த பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் நடந்திராத கொடுமைகளையும், சித்திரவதைகளையும், அவஸ்தைகளையும் சந்தித்தது நக்கீரனும் அதன் ஆசிரியரும் தான். ஆனால் நக்கீரன்,அனைத்து துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி சமூகத்தில் நடக்கும் அவலங்களை உடைத்து உண்மையை வெளிக்கொண்டு வர, அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் வேலை செய்து, நீதியை நிலைநாட்ட இன்று வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது. வீரப்பனை நேரில் சந்தித்துவீடியோபேட்டி எடுத்ததை, கிட்டத்தட்ட 29வருடங்களாகக்கட்டிக் காத்ததை, டாக்குமெண்டரியாகவெளிக்கொண்டு வந்திருக்கிறது ‘கூச முனுசாமி வீரப்பன்’.

இதுவரை வீரப்பனைப் பற்றி வந்த படைப்புகள் அனைத்துமே வீரப்பனைப் பற்றி காவல்துறை சொன்னதும், வீரப்பனைப் பற்றி மற்றவர்கள் சொன்னதுமேயாகும். முதல் முறையாக வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொன்னதை ஆவணப்படமாகவும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடும் தந்திருக்கிறது. டாக்குமெண்டரி என்றாலே சுவாரசியத்தன்மையற்று இருக்கும், விறுவிறுப்பு இல்லாமல் இருக்கும், ரசிக்கும்படியாக இருக்காது போன்ற காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த எல்லா அடிப்படைத்தன்மையையும் அடித்து உடைத்து, சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியாகவும் தந்திருக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த டாக்குமெண்டரி சீரிஸ், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாகப் பலரது பாராட்டுகளோடு பார்க்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 6எபிசோடுகளில்ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. வீரப்பனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று வீரப்பனைப் பற்றி தினசரி நாளிதழ்கள் ஏதேதோ எழுதுகிறார்கள். ஏனெனில் வீரப்பனா வந்து கேட்டு விடப்போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறார் நக்கீரன் மூத்த நிருபர்ஜீவாதங்கவேலு. கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது, ஆனால் வீரன்தான் என்கிறார் நக்கீரன் ஆசிரியர். வீரப்பன் ஒன்றும்ஹீரோஇல்லை கொலைகாரன் என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர்ஐபிஎஸ். பெயருக்கேற்றார்போல் அவர் வீரப்பன் என்கிறார் நாம் தமிழர்கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இவ்வாறாக ஒவ்வொருவரின் மாறுபட்ட பார்வையும், அதற்கான அவர்களது விளக்கமும் அப்படியே இந்தடாக்குமெண்டரியில் சொல்லப்பட்டிருக்கிறது.எந்த ஒரு இடத்திலும் வீரப்பனைஹீரோவாககாட்ட வேண்டும் என்றோ அல்லது வீரப்பனைவில்லனாககாட்ட வேண்டும் என்றோ, எவ்விதமானஜோடனைகளும்இல்லாமல், வீரப்பன் என்னவாக இருந்தாரோ அதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்தடாக்குமெண்டரிஒரு நேர்மையான படைப்பாகும். வீரப்பனைப் பற்றி நாம் முன்னரே மனதில் வைத்திருந்த எல்லா பிம்பங்களையும்இந்தடாக்குமெண்டரிஉடைத்து எரிகிறது. வீரப்பன் நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக, தீவிரமான கடவுள் பக்தி உள்ளவராக, காட்டின்மூலைமுடுக்கெல்லாம்பயணிப்பதற்குத்தெரிந்து வைத்திருந்தவராக, விலங்குகளின் மொழி புரிந்தவராக, துப்பாக்கி சுடுவதில் வல்லவராக இருந்திருக்கிறார்.

அதே வேளையில் தன்னை காட்டிக்கொடுக்க முனைந்தவர்களை ஈவு இரக்கமற்று கொலை செய்கிற கொலைகாரனாகவும் இருந்திருக்கிறார். கொள்கைக்காகஓடுகிறவனைப்பணத்துக்காக ஓடுகிறவர்கள் துரத்திப் பிடிக்க முடியாது என்பது பிரபலமான ஒரு வசனம். அதற்கேற்ப தமிழக, கர்நாடக காவல்துறையினரால், இராணுவத்தினரால் காட்டுக்குள் வைத்து இறுதிவரை பிடிக்க முடியாத காட்டின் ராஜாவாக இருந்திருக்கிறார். இதுபோன்ற மாற்றுப் பார்வையை பார்வையாளர்களுக்கு இந்த ஆவணப்படம் தருகிறது.

தன்னைப் பிடிக்க வந்த, துப்பாக்கியோடு சுட வந்த காவல்துறையினரை, அதிரடிப்படையினரை எவ்வாறுசுட்டுச்சண்டையிட்டார் என்று வீரப்பனே ஒருஎபிசோடில்நடித்துக் காண்பிக்கிறார்.சினிமாவின்அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவர் ஒளிந்து மறைந்து சுட்ட விதத்தை விவரிப்பது அமைந்துள்ளது.

வீரப்பனின் மூத்த மகளும், வீரப்பனால் கொல்லப்பட்ட காவலரின் மகளும்டாக்குமெண்டரியில்பேசுகிறார்கள். இரு வேறு விதங்களில் தகப்பனை இழந்தவர்கள் இருவரும், வீரப்பன் மகள் நியாயத்தின் பக்கம் நின்று பக்குவத்தோடு பேசுகிறார். காவலரின் மகள் தனது அப்பாவிற்காக எழுதிய கவிதையை வாசிக்கிறார். கல்நெஞ்சக்காரர்களையும்லேசாகக்கண்ணீர் விடத்தான் வைத்துவிடும்.

வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற தமிழ்நாடு - கர்நாடகா இரு மாநில காவல்துறையும் இணைந்து பழங்குடி மக்களிடையே நடத்திய அதிகாரத்திமிர்த்தனத்தையும்,ஒர்க்‌ஷாப்என்ற பெயரில் நடத்திய பாலியல் ரீதியிலான கொடூரங்களையும், தாங்க இயலாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அந்த மக்களை ஆட்படுத்தியதையும் நக்கீரன்தான் வெளிஉலகத்திற்குக்கொண்டு வந்தது. பாதிக்கப்பட்ட மக்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று, நீதிகேட்டுசதாசிவம்கமிசன்முன்புநிறுத்தியது. இன்றளவும் இந்தகொடூரங்களைத்தாங்கிய மரத்துப் போன மனதோடுதான் அவர்கள் வாழ்கிறார்கள். அப்படியே தான் இந்தடாக்குமெண்டரியில்பேசுகிறார்கள். இன்றளவும் அவர்களுக்கான குறைந்தபட்ச நிவாரணம் கூட கிடைக்காமல் இருப்பதுதான் அதிகார வர்க்கத்தின்பலமாகப்பார்க்கப்படுகிறது.

வீரப்பனுக்கு ஜெயலலிதா, கலைஞர், ரஜினிகாந்த், ராமதாஸ், வைகோ என்ற ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களின் மீதும் ஒரு பார்வையும், விமர்சனமும், கரிசனமும் இருந்திருக்கிறது. அதை அவர் விவரிக்கும் விதமும் நக்கலாகவும் இருக்கிறது. மேலும் இத்தொடரில் மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நக்கீரன் மூத்த நிருபர்சுப்புஎன்ற சுப்ரமணியன், திரைக்கலைஞர் ரோகிணி,அரசியல் செயற்பாட்டாளர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர்வீரப்பனைப்பற்றிய அனுபவங்களையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும்அவர்களதுகருத்துகளைப்பகிர்கின்றனர்.

இந்தடாக்குமெண்டரிசீரீஸ்ஸைதீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.ஜெயச்சந்திரஹாஷ்மி,வசந்த்பாலகிருஷ்ணன் உடன் இணைந்து எழுதி, சித்தரிப்பு காட்சிகளைஷரத்ஜோதி திறம்பட இயக்கியுள்ளார். இந்த படைப்பின் தொழில்நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்குள்ளேயேகேமராவைகொண்டு வந்து பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளார்.டாக்குமெண்டரியின்புட்டேஜ்பல மணிக்கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும், அதை குறிப்பிட்ட நேர அளவிற்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பாகப்படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராம் பாண்டியன், இசையமைப்பாளர் சதீஷ்ரகுநாதன்பின்னணி இசையின் பங்களிப்பு, டாக்குமெண்டரியைசினிமாவைப்போன்று ரசிக்க வைக்கிறது. நடித்த அனைவரும் வீரப்பன் வாழ்ந்தகாலத்திலிருந்தபலமனிதர்களைக்கண் முன்னே நிறுத்துகிறார்கள்.

பிரபாவதி ஆர்.வி.,ஜெயச்சந்திரஹாஷ்மி,வசந்த்பாலகிருஷ்ணன் ஆகிய மூவரின் உருவாக்கத்தில் இந்தடாக்குமெண்டரிஉருவாகியிருக்கிறது. இந்த மூவரும் பெரும் நெருக்கடியான நிலையில்தான் இந்த படைப்பில் உழைத்திருக்க வேண்டும்.ஏனெனில் எங்கேயும் வீரப்பனைஹீரோவாகவும்காட்டவில்லை, வில்லனாகவும் காட்டவில்லை, வீரப்பன் என்னவாக இருந்தார் என்பதையும், வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் நடந்த கொடுமைகளையும், வீரப்பனால் கொல்லப்பட்டவர்களைப் பற்றியும் நேர்மையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்த நேர்மைதான் இந்தடாக்குமெண்டரியின்உண்மையான வெற்றியாகும்.

nakkheeran gopal
இதையும் படியுங்கள்
Subscribe