Skip to main content

பத்தாண்டுகளுக்கு பிறகு விஜய் ஆண்டனிக்காக செய்த கே.ஜே.ஜேசுதாஸ்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் 'தமிழரசன்'. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர் சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது.

 

yesudas

 

இந்நிலையில் தற்போது இரண்டு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக இளையராஜா இசையில் ஜெயராம் எழுதிய... 

"பொறுத்தது போதும் 

 பொங்கிட வேணும் 

 

k

 

புயலென வா" என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் சமீபத்தில் பதிவானது. 2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தற்போது பத்து ஆண்டுகள் கழித்து தமிழரசன் படத்தில் பாடியுள்ளார். படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக இப்பாடல் ஒலிக்கப் போகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' - ஓடிடி ரிலீஸ் அப்டேட்

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

vijay antony tamilarasan ott release update

 

கௌசல்யா ராணி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வெளியான படம் 'தமிழரசன்'. இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர் மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இதில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “விஜய் ஆண்டனி மற்றும் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்கள் என் கருத்துரு மேல் நம்பிக்கை கொண்டு தங்கள் அனைத்து திறமையையும் வெளிக்காட்டினர்” என்றார்.

 

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை இயக்குநர் இதில் இணைத்துள்ளார். மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும் இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை” என்றார்.

 

 

Next Story

விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன்; இழுபறிக்கு பிறகு ரிலீஸை அறிவித்த படக்குழு 

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

vijay antony and ramya nambeesan starring tamilarasan movie release date announced

 

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய்  ஆண்டனி நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக தயாராகி வருகிறது.

 

ad

 

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள 'தமிழரசன்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். யோகி பாபு சோனு சூட், கஸ்தூரி சங்கர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, எஸ்.என்.எஸ் மூவிஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு கரோனா பரவலால் படத்தின் ரிலீஸ் தேதியை  அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து. ஆனால் சில பிரச்சனைகளால் அக்டோபர் மாதம் தமிழரசன் படம் வெளியாகவில்லை.

 

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு  படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு  வெளியிட்டுள்ளது. அதன்படி 'தமிழரசன்' திரைப்படம் இந்த (டிசம்பர்) மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.