Skip to main content

"மறைமுகமாக ஆதரவு அளித்தது இந்த பிரதமரின் ஒற்றை அரசு" - கிஷோர்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

kishore about wrestlers protest and hijab

 

பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம் ஹிஜாப் விவகாரம் குறித்து போராட்டம் நடைபெறுகிறது. 

 

இந்நிலையில் இந்த இரண்டு விவகாரம் குறித்து நடிகர் கிஷோர் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மெல்ல மெல்ல படித்து, அதிகாரம் பெற்று வந்த ஒரு முஸ்லீம் பெண்ணை, ஆண் மேலாதிக்கத்தின் அடையாளமான ஹிஜாப்பிலிருந்து விடுவித்து, அதை வெளிப்படையாக எதிர்க்காமல் அதே ஹிஜாப்பில் தஞ்சம் அடையச் செய்து ஒரே கல்லில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது. ஒரு பெண் படித்தால், அவளுக்குப் பின் வரும் தலைமுறைகள் கல்வி கற்கும். அரசாங்க புள்ளி விவரங்களின் படி, இன்றும் இந்தியாவில் நூற்றில் 14 இசுலாமியப் பெண்களே கல்லூரிக் கல்வியில் சேருகிறார்கள். பெண்களை இங்கேயே நிறுத்திவிட்டால் என்ன செய்வது? குடும்பம், உறவினர்கள், மதம், பாரம்பரியம் என்று எல்லாத் தடைகளையும் தாண்டி கடைசிப் படியில் அதுவும் கல்வியில் இருந்து விலகியதற்கு அவளே காரணமானால்? முஸ்லீம் பெண்ணும், ஒட்டுமொத்த இனமும் நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன." எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து, "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பதிலாக போராட்டக்காரர்கள் மீது தங்கள் அதிகாரத்தை அடிக்கடி கட்டவிழ்த்துவிடும் முதுகெலும்பில்லாத காவல்துறை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து அமைதியாக அமர்ந்திருக்கிறது இந்த பிரதமரின் ஒற்றை அரசு. உலகத் தரம் வாய்ந்த பிரபலங்களுக்கு இது நடக்குமானால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இப்படி நடந்தால் என்ன நடக்கும்? அது போதாதா? பல நூற்றாண்டுகளாகப் போராடி இன்று உலகின் உச்சத்தை எட்டியுள்ள தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் நாட்டின் தாய் தந்தையர்களை மீண்டும் மனுவின் கற்பனையின் நான்கு சுவர் அடைப்புக்குள் தள்ளும்படி வற்புறுத்துவது ஆகும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மற்றொரு பதிவில், புதிய நாடாளுமன்றம் திறந்தது குறித்துப் பேசியுள்ளார். "நாட்டின் பெருமை மிகு பெண்களை சிறையில் தள்ளிவிட்டு, தானே முடிசூடும் இந்த நாட்டின் புதிய மன்னர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.