Advertisment

''அதனால் ஏற்பட்ட சேதம் என் இதயத்தை நொறுக்கியுள்ளது'' - கியாரா அத்வானி வருத்தம்!

kiara advani

கரோனா பாதிப்பு நெருக்கடிக்கு இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை 'அம்பன்' புயலாக மாறி வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நேற்று ஆக்ரோஷமாகக் கரையைக் கடந்தது.

Advertisment

புயல் கரையைக் கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மேலும் புயலுக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை கியாரா அத்வானி அம்பன் புயல் சேதம் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''அம்பன் சூறாவளியால் ஏற்பட்ட சேதம் என் இதயத்தை நொறுக்கியுள்ளது. இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிராத்திக்கிறேன். தன் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்''எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

amphan cyclone kiara advani.
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe